ஆசியா

மலேசியாவில் கைவிட்டுச் சென்ற அம்மா – காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

மலேசியாவில் காருக்குள் விட்டுச்செல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் துயரச் சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Shah Alam மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் நடந்தது.

சிறுமியின் அம்மா அந்த மருத்துவமனையில் வேலை செய்கிறார். பகல் 2 மணிக்குச் சிறுமியை அருகிலுள்ள சிறார் காப்பகத்தில் இருந்து அழைத்துவந்த அவர், மறதியால் சிறுமியைக் காரிலேயே விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டார்.

சிறுமி தூங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 6 மணிக்குத் தமது கணவர் தம்மைத் தொடர்புகொண்டபோதுதான் பிள்ளை காருக்குள் இருந்தது அவரது நினைவுக்கு வந்தது.

சுயநினைவற்ற நிலையில் காருக்குள் இருந்து மீட்கப்பட்ட அந்தச் சிறுமி உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமியின் உடலில் உள்ளும் வெளியிலும் காயங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறியது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!