ஐரோப்பா

சுவிஸில் மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் நடந்து வந்த இளம்பெண்..

தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளம்பெண், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று சுவிஸ் மாகாணம் ஒன்றில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

நேற்று, ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணின் கணவன் குடியிருப்புக்குள் பதுங்கிய நிலையில், இரண்டு மணி நேரம் அவரை அவர் வெளியே வரவில்லை.

பொலிஸார் அந்த வீட்டைக் கண்காணிக்க ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்ததுடன், மதியம் 1.00 மணியளவில், stun grenades என்னும் கருவிகளுடன் அந்த குடியிருப்புக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த நபர் வெளியே கொண்டுவரப்பட்டார். ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடும் அதிர்ச்சியை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content