அவுஸ்திரேலியாவில் பிறந்தநாள் வாழ்த்து அட்டையால் மில்லியனரான பெண்

பிறந்தநாள் வாழ்த்து அட்டையுடன் வந்த லாட்டரி சீட்டை வென்ற பெண் ஒருவர் 2.58 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளதாக அவுஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் ஒருவர் அண்மையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகவும், குறித்த பெண்ணுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவர் அவருக்கு பிறந்தநாள் அட்டையை லாட்டரி சீட்டுடன் அனுப்பியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனை அந்த பெண் சரிபார்த்ததில், 2.58 மில்லியன் டொலர் பரிசுத் தொகை இருப்பது தெரியவந்தது.
பின்னர், குறித்த பெண் தனது உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியபோது, அவரும் இந்த சம்பவம் குறித்து ஆச்சரியமடைந்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)