இலங்கை

கம்பளையில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கம்பளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளது.

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கம்பளை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வைத்து திடீரென தீப் பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தனர்.

தீயினால் முச்சக்கரவண்டிக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!