கம்பளையில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கம்பளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளது.
கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கம்பளை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வைத்து திடீரென தீப் பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதனால் பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தனர்.
தீயினால் முச்சக்கரவண்டிக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)