14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டம்: கொழும்பில் நாளை அணிதிரளும் சட்டத்தரணிகள்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்பு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கு பிறகே இவ்வாறானதொரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.





