ஐரோப்பா

சாட்ஜிபிடியை நம்பி பயணம் செய்த ஸ்பெயின் நாட்டவருக்கு விமான நிலையத்தில் சிக்கல்

ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு செல்லும் ஆவணங்கள் தேவையா என்பதை சாட்ஜிபிடியிடம் கேட்டு பயணித்து சிக்கலில் சிக்கியுளளார்.

ஆனால், விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோதுதான் தகவல் தவறானது என்பதை அவர் உணர்ந்தார்.

இந்த சம்பவத்தை அவர் TikTok-இல் காணொளியாக பகிர்ந்துள்ளார். கண்ணீருடன் தோன்றும் அவரை இணையத்தில் பெரும்பாலானவர்கள் ஆறுதல் கூறவில்லை. மாறாக, தேவையான அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்காமல் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றியதற்காக கடுமையாக விமர்சித்தனர்.

“அரசாங்க இணையதளங்களை பார்த்திருக்க வேண்டியது” என்றும், “AI நம் அனைவரையும் முட்டாள்களாக்குகிறது” என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு, செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும் போது அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தவிர்க்கக் கூடாது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்