இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் றோல்ஸ் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் சுமார் 4 இன்ச் அளவு நீளமுடைய கறல் ஏறிய கம்பிதுண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் குறித்த கடையில் 80 ரூபாய் வீதம் 10 றோல்களை கொள்வனவு செய்து , தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு றோல்களை பரிமாறி சாப்பிட்ட வேளை றோல் ஒன்றினுள் கம்பி துண்டு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை றோல்கள் வாங்கிய கடைக்கு அவற்றை விநியோகம் செய்வது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஆகும்.

எனவே குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை