தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி முன்னெடுப்பு!

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது.
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.
(Visited 12 times, 1 visits today)