இலங்கை

ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவர் கைது! விசாரணையில் வெளியான தகவல்

திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு (12) குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்மாந்தோட்டை- உதாகம்மான பகுதியில் வசித்து வருபவர் எனவும் தெரிவைக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்திற்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை செய்த போது கடந்த இரண்டு வருடங்களாக திருகோணமலை பிரதேசத்திற்கு அம்மாந்தோட்டை- பிரதேசத்திலிருந்து ஹெரோயின் போதை பொருளை கொண்டு வருவதாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், புலன் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்