இலங்கை செய்தி

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்ட நபர்!! களுத்துறையில் சம்பவம்

களுத்துறை நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாளால் தாக்கி நபர் ஒருவரை வெட்டிய நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நகர மையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது கைகளிலும் முதுகிலும் மூன்று கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்திற்கு முன்பாக தாக்குதல் நடத்தப்பட்டு மாவட்ட செயலாளர் அலுவலகம் நோக்கி ஓடும் போது வீதியில் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளானவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவர் தொழில் ரீதியாக தனியார் பேருந்து நடத்துனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content