அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

நிலவின் தென் துருவத்தில் வேறு எந்த நாடும் கால் பதிக்காத நிலையில், இந்தியாதான் முதன் முதலாக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

முன்னதாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா, லுனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா அனுப்பிய இந்த விண்கலம் தோல்வியில் விழுந்தது.

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற போதும் கடைசி கட்டத்தில் தரையிறங்க முடியாமல் நிலவில் விழுந்தது.

ஆகஸ்ட் 19 ஆம் திகதி இந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நாசவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது.

இந்த பள்ளம் ரஷ்யாவின் லுனா 25 விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!