நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர்

திருடப்பட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த போது திருடியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.
(Visited 10 times, 1 visits today)