இலங்கை செய்தி

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் கைது

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் யாழ்பபாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொழும்பு தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை