மத்திய கிழக்கு

நைஜீரியா அரசு நடத்திய பிரம்மாண்ட மணவிழா; 1,800 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் !

நைஜீரியாவில் அரசு நடத்திய திருமண விழாவில் 1,800 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நைஜீரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு காதலர்கள் தங்கள் திருமணத்திற்கான செலவுகளை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு அரசு மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள் இணைந்து பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ம் திகதி வட நைஜீரியாவில் உள்ள கனோ மாகாணத்தில், அரசு சார்பில் பிரம்மாண்ட திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் 1,800 மணமக்கள் திருமணம் செய்துகொண்டனர்.

 

பெண்ணிற்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்வது என்பது பெரும்பாலான ஆண்களால் இயலாத காரியம் என்பதாலேயே அரசும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறது.

மேலும், நைஜீரியாவில் வீட்டின் பொறுப்புகளை ஆண்களே முழுவதும் சுமக்கும் நிலையில், அரசு திருமண ஏற்பாட்டில் கலந்து கொள்வோருக்கு தனியார் அமைப்புகளின் உதவியுடன் பெண்களுக்கு தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களால் தங்கள் குடும்பத்திற்கு உதவ முடியும் என்று பயிற்சி அளிக்கும் தன்னர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content