இலங்கை செய்தி

கருவாடு கறி  சட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

பொசன் தன்சல வழங்கப்பட்ட போது கருவாடு கறி  சமைத்த சட்டிக்குள் தவறி விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்தசிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் பொசன்  போயாவை முன்னிட்டு  சாப்பாடு வழங்கும் தன்சல் இடம்பெற்றதுடன் சிறுமி கடந்த 23ஆம் திகதி அங்கு தனது தாயுடன் தங்கியிருந்த வேளையில் கறி சட்டிக்குள் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!