இலங்கை செய்தி

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்தில் சிக்கியது

 

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய 10 கனுவா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த சுமார் 30 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளிய 10 கணுவ பிரதேசத்தில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்த போதிலும், அப்போது பேருந்தில் பயணித்த ஏறக்குறைய 30 பயணிகள் பெரும் முயற்சியுடன் பேருந்தில் இருந்து இறங்கியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!