சாலையோரம் காத்திருந்த பெண்மீது பேருந்து மோதி விபத்து!
ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் யட்டியந்தோட்டை, தங்கொலவத்த பகுதியில் இன்று (20) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் மற்றும் மகன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து யட்டியந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





