பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் உயிரிழப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/boy.jpg)
இன்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல பேருந்தில் ஏறுவதற்கு சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இன்று காலை மாணவனின் தந்தை வீட்டில் இல்லாததால், பாடசாலைன்னு செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், மாணவர் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.