இலங்கை

விரைவில் TIN தொடர்பில் அமைச்சரவைக்கு முன்மொழிவு சமர்ப்பிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்

வரி பதிவுக்கான வரி அடையாள எண்ணை (TIN) வழங்கும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) இணைத்துக்கொள்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்போது தேசிய அடையாள அட்டை எண்ணை TIN ஆகப் பயன்படுத்த முன்மொழியப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்மொழிவு தொடர்பான பரிந்துரைகள் ஆறு நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரை நான்கு நிறுவனங்கள் தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!