இலங்கை செய்தி

அன்னை மரியாள் உருவத்தில் கந்தானை நகரில் சுற்றித்திரிந்த மர்ம பெண்

கடந்த சில நாட்களாக, அன்னை மரியாளுக்கு நிகரான வடிவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கந்தானை நகரில் சுற்றித் திரிந்த காட்சிகள் அடங்கிய பல காணொளிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

குறித்த பெண் யார் என்ற  வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக வெள்ளை ஆடை அணிந்து கந்தானை நகரில் வலம் வந்த இந்த பெண் குறித்து சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்று சந்தேகிக்கப்படலாம் என்றும், அன்னை மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் சிலர் கூறினர்.

அதன்படி, அந்த பெண் குறித்து சமூகத்தில் தீவிர ஆர்வம் இருந்தது. இதனடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர் ரஷ்ய பெண் என்றும், விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

அவர் இந்த நாட்டிற்கு வந்து பௌத்த தியான முறைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார்  அம்பலப்படுத்தியுள்ளனர்.

அவர் கத்தோலிக்க பெண்ணாக இருந்தாலும் பௌத்த தத்துவத்தை பயின்று வருவதாகவும், இதனிடையே கந்தானை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!