Skip to content
August 14, 2025
Breaking News
Follow Us
உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு தாக்கல்

இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறி, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இனப்படுகொலைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 84 பக்கங்களைக் கொண்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்கா வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தம்மை அவமதித்துள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இனப்படுகொலையைத் தடுப்பதில் தமது நாடு உறுதியாக இருப்பதாகவும், பாலஸ்தீனியர்களின் மரணம் வருத்தமளிப்பதாகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி