வட அமெரிக்கா

பிரேசிலில் தனது கணவரின் ஆணுறுப்புடன் காவல் நிலையத்தல் சரணடைந்த பெண்!

பிரேசிலிய பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த நோக்கத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  சாவ் பாலோவிற்கு அருகிலுள்ள அதிபாயாவில் வசிக்கும் குறித்த பெண் தனது கணவரின் ஆணுறுப்பை வெட்டியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது 15 வயது மருமகளுடன், கணவர் உடல் உறவு கொண்டமை தெரியவந்த நிலையில், தான் மேற்படி செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

துண்டிக்கப்பட்ட உறுப்பை கழிப்பறையில் வீசுவதற்கு முன், அந்த பெண் உடல் உறுப்புகளை அகற்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற குறித்த பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்துடன், துண்டிக்கப்பட்ட ஆண்குறியை “மீண்டும் பொருத்துவது சாத்தியம்” என்று தான் கேள்விப்பட்டதாகவும், அதனால் தான் அதை சுத்தப்படுத்தியதாகவும் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் அந்த பெண் விளக்கியுள்ளார்.

மிருகத்தனமான தாக்குதலில் உயிர் பிழைத்த 39 வயதான கணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தற்போதைய உடல்நிலை தெளிவாக தெரியவில்லை.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content