அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

காப்புரிமை செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சில் பயன்படுத்தியதால் விற்பனைக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

உலகின் முன்னணி தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பில் கடந்த செப்டம்பர் மாதம் அதிநவீன வசதிகளை கொண்ட ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச் ரகங்களை அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட் வாட்ச்களை இயக்க தொடுதுறைகளை தொட வேண்டிய அவசியம் இல்லை. விரல்களை இரண்டு டப் செய்தால் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியும். மேலும் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டு இருந்த இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் உலகம் முழுவதும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பயன்படுத்திய pulse oximeter என்ற தொழில்நுட்பம் masimo என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதற்கான காப்புரிமையை masimo நிறுவனமே வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Masimo நிறுவனம் அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா 2 மற்றும் சீரிஸ் 9 ஆகிய இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்ய தடை விதித்திருக்கிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தடை உத்தரவை நீக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!