இலங்கை செய்தி

அரச அலுலகத்தில் இருந்து டயர்களை திருடிச் சென்ற ஊழியர்கள்

கடுவெல மாநகரசபையின் அதுருகிரிய வல்கம மாவட்ட காரியாலயத்தின் களஞ்சியசாலையில் இருந்து 23 இலட்சம் ரூபா பெறுமதியான 34 டயர்களை களவாடிய அலுவலக ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் பின்னர், நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை உப அலுவலகக் களஞ்சியசாலையில் இருந்து 34 டயர்களை யாரோ திருடிச் சென்றுள்ளதாக வல்கம மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

41 வயதுடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியிருந்தமையினால் ஏனைய இருவரின் உதவியுடன் திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content