பிரான்ஸ் தலைநகரில் இரு பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
																																		பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பரிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
8 ஆம் வட்டாரத்தில் Champs-Élysées வீதில் இக்கைது சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
25 வயதுடைய ஒருவர் நவம்பர் 11 ஆம் திகதி அன்று 19 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அவர்களில் ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டுள்ளார். அடுத்தடுத்து இடம்பெற்ற இச்சம்பவம் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொலிஸாரின் துரிதமான நடவடிக்கையினால், அப்பகுதி முழுவதும் உள்ள பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)
                                    
        



                        
                            
