இலங்கை

நுவரெலியா செல்வோருக்கான விசேட அறிவிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவூடான போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைத்தொடர்களின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெவோன் மற்றும் செயின்ட் கிளேர் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பனிமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுவரெலியா பயணிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதால் வான் கதவுகள் தானாக திறக்கப்படுவதால் நீர்த்தேக்க அணைக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!