தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/New-Project-2023-10-31T215553.783-1280x700.webp)
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவராக விஷேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகார சபையின் பணிப்பாளர் சபை இன்று(31) கூடிய போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன், சுகாதார அமைச்சர் நடத்திய கலந்துரையாடலுக்கு அமைய, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், தரமற்ற மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மீது அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டன.
(Visited 2 times, 1 visits today)