ஐரோப்பா

பாலஸ்தீனிய மக்களுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீன மக்கள் பாரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் இவர்களுக்கு ஆதரவாக குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகள் அப்பாவி மக்கள் தாக்கப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உதவி தொகுப்புகளையும் அறிவித்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி ரஃபா எல்லை வழியாக முதற்கட்ட உதவி அம்மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கமைய தற்போது பிரித்தானியாவும் மேலதிகமாக 20 மில்லியன் பவுண்டுகளை பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உதவி தொகுப்பை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று (23.10) அறிவித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content