இலங்கை

மட்டக்களப்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி மோசடி

தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரணடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக கொடுத்த பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றுகூடிய காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்தினால் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் 100 வீதம் நம்பிக்கை என கூறி தாய்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என கூறி 188 நபர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.

தாய்லாந்திற்கு ஒருவருக்கு 450,000ரூபா என 22 நபர்களிடமும் டென்மார்க்கிற்கு ஒருவருக்கு 550,000 ரூபா என 20 நபர்களிடமும் துபாய்க்கு ஒருவருக்கு 350,000 ரூபா என 146 நபர்களிடமும் மொத்தமாக 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் (72,100,000) பெற்றுக்கொண்டுள்ளனர்.

See also  பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள்

கடந்த திங்கட்கிழமை வெளிநாடு அனுப்புவதாக கூறி 42 பேரை கொழும்பிற்கு அழைத்து சென்று விடுதியொன்றில் விட்டுவிட்டு முகவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை துபாய் நாட்டிற்கு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசடி நிலையினை கொக்கட்டிச்சோலை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர் இதனை அடுத்து இன்றைய தினம் குறித்த மூன்று முகவர்களும் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று முகவர்களிடமும் தாங்கள் வழங்கிய பணத்தினை பெற்று தருமாறு கோரி போலீஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அங்கிருந்துவந்து மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்பாகவும் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த முகவர்களாக செயற்பட்டவர்களின் ஒருவர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content