ஆசியா

சிறைக்குள் விஷம் வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம் – வழக்கறிஞர் அச்சம்

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாகிஸ்தான் அதிபருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் விஷம் வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம் என அவரது தரப்பு வழக்கறிஞர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்ரான் கான் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மனரீதியாக இம்ரான்கான் சிறையில் துன்புறுத்தப் படுகிறார். அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சிறையில் விஷம் வைத்து இம்ரான்கான் கொல்லப்படலாம். எனவே, அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

இம்ரான் கான் விஷம் வைத்துக் கொல்லப்படலாம் என்ற அவரது வழக்கறிஞரின் கருத்தால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content