கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!

கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
(Visited 10 times, 1 visits today)