இலங்கை

8 வயது சிறுவனுக்கு நேரந்த விபரீதம் : 15 வயது சிறுவன் கைது

8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) மாலை பாடசாலை முடித்து மேலதிக வகுப்புகளுக்காக வவுனியா, வடகுளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவனை அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் 8 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சம்பவம் தொடர்பில் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சிறுவன் இரவு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வவுனியா பொலிஸாரால் 15 வயது சிறுவன் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!