இலங்கை செய்தி

கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியர்

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இன்று (07) காலை இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா (25) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கினிஹேன மயானத்திற்கு அருகில் இன்று காலை முன்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது யாரோ அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியை வீட்டில் இருந்து வரும்போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதுடன், அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று சந்தேக நபரை அடையாளம் காணும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

(Visited 14 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!