இலங்கை

தேசிய காணி கொள்கையை ஸ்தாபிக்க நடவடிக்கை!

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் கணிசமான காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09.08) விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த காணிகளில் 90 முதல் 92 வீதமானவை திட்டமிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த காணியில் 22,919 ஏக்கர் காணி அடங்குவதாகவும் அதில் 817 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் 22,101 ஏக்கர் தனியார் காணிகள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியின் அளவு 3754 ஏக்கர் எனவும் அதில் 862 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் 2832 ஏக்கர் தனியார் காணிகள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய காணி ஆணைக்குழு மற்றும் தேசிய காணி கொள்கையை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content