இலங்கை

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு -இளம் பெண் எரித்துக் கொலை! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 23.07.2023 அன்று அதிகாலை அடையாந்தெரியாத நபர்கள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது வீட்டிற்கும் தீ வைத்தததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் பத்து பேர் தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தனர்

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்பி ருவான் குணசேகர,

குறித்த வீட்டில் வசித்து வந்த 19வயது சிறுமியின் பிறந்தநாள் வைபவம் 22ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது . இதன் போது வீட்டிற்கு வருகை தந்த சிலரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளமையுடன் வீட்டு உரிமையாளருக்கு பாரிய ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது .

தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளம் பெண்ணின் ஜனாசா நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களின் ஒருவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content