இலங்கை செய்தி

பெண்கள் ஆடையை அணிவித்து வீதியில் கைவிடப்பட்டுச் சென்ற முதியவர்

பெண் போன்று தோற்றமளிக்கும் வகையில் நீளமான ஆடையை அணிந்து நாத்தண்டி வெலிபன்னாகஹமுல்ல சந்தியில் கைவிட்டுச் சென்ற வயோதிபர் ஒருவர் துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த வயோதிபரை உடுபத்தாவ உள்ளூராட்சி சபையின் பணி நிர்வாகி ரொஷாந்த மனோஜ் அரவிந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

70 – 75 வயதுக்கு இடைப்பட்டவர் என மதிப்பிடப்பட்ட இந்த ஆடவர் கண்டுபிடிக்கப்பட்ட போது, ​​அவர் அணிந்திருந்த பெண்களின் ஆடைகள் மலத்தால் மூடப்பட்டிருந்தன.

தரையில் படுத்து புலம்பிக்கொண்டிருந்த நபரை சுற்றியிருந்த இளைஞர்களின் உதவியுடன் குளிப்பாட்டி சுத்தப்படுத்தியதாகவும், அவர் பசியால் வாடுவதைக் கண்டறிந்ததாகவும், அவருக்கு உணவும் பானமும் கொடுத்து உடனடியாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் அரவிந்த தெரிவித்தார்.

அவரிடம் தகவல் கேட்ட போது அவர் பதுளையை சேர்ந்த அபேரத்ன பண்டார என்று தான் சிரமப்பட்டு பேசியதாகவும் அரவிந்த மேலும் தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் வசிப்பதாக கூறிக்கொள்ளும் தான் அந்த பகுதிக்கு எப்படி வந்தேன் என்ற தகவலை வெளியிட தவறியதாக அவர் கூறினார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!