இலங்கை செய்தி

சுரேஷ் சலே 3 நாட்கள் தடுப்பு காவலில்!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (25) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே மேற்படி தகவல் வெளியிட்டப்பட்டது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெடவத்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்படி ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட விசாரணைகள் தேவை. எனவே, இந்த கட்டத்தில் விரிவான தகவல்களை வெளியிட முடியாது.” – எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!