டொனெட்ஸ்க் பகுதியை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க மாட்டோம் -செலென்ஸ்கி எச்சரிக்கை
இந்த வாரம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, உக்ரைன் அதிரடி பதிலைத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் சேலென்ஸ்கி , அமெரிக்காவின் அழுத்தம் மிகவும் ஒருதலைப்பட்சமானது என்று கூறினார்.
ரஷ்யா கட்டுப்படுத்தாத கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கை உக்ரைனியர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது ரஷ்யா உக்ரைனின் சுமார் 19% நிலத்தை கட்டுப்படுத்துகிறது, இது மார்ச் 2022 இல் 26% இருந்ததைவிட குறைந்துள்ளது.




