அரசியல் இலங்கை செய்தி

பொன்சேகா வெத்து வேட்டு: மஹிந்த அணி கொதிப்பு!

“ முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா Sarath Fonseka கூறும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தெரிவித்துள்ளது.

மக்களுக்காக அரசியல் செய்யும் நபர் அவர் அல்லர் எனவும், பகைமை அரசியலையே முன்னெடுத்துவருகின்றார் எனவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.

இறுதிப்போரின்போது புலிகள் சரணடைவதற்கு மஹிந்த ராஜபக்ச சந்தர்ப்பமளித்தார் என பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது. எனினும், இராணுவத்தினரிடம் சரணடைய சொன்னதால் அத்திட்டம் தோல்வி அடைந்தது எனவும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ போர் முடிவடையும்வேளை இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரு விடயத்துக்காக மட்டுமே பொன்சேகாவை மதிக்கின்றோம்.

அரசியல் ரீதியில் அவர் பெறுமதியற்ற நபர். மக்களுக்காக அல்லாமல், தனிப்பட்ட பகைமையை தீர்க்கவே அரசியல் செய்கின்றார்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!