இலங்கை செய்தி

பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை இன்று(19) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்   ஈடுபட்டுள்ளார்.

புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெற்றது.

அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கேவுக்கும் இடையிலும் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!