பிரான்ஸில் 35 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
பிரான்ஸில் கடந்த 35 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
1959 ஆம் ஆண்டு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து நாடு அதன் மிக நீண்ட தொடர் மழை நாட்களை அனுபவித்து வருவதாகவும், இது 2023 ஆம் ஆண்டின் சாதனையை முறியடிப்பதாகவும் தேசிய வானிலை சேவையான மீட்டியோ-பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
தொடர் மழையால் மேற்கு பிரான்சில் உள்ள நான்கு துறைகளுக்கு வெள்ள அபாயத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெட்ரோ புயலின் பாதிப்புடன் நிலைமை மோசமடையும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்பது துறைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை முதல் வரண்ட வானிலை பதிவாகும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




