இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

“ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது விபரமாகப் பேசினோம்.” என்று சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு பிரயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி தரப்பில் இருந்து கோரப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!