பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 5 பேர் மரணம்
பாகிஸ்தானின்(Pakistan) வடமேற்கு கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
குரேஷி மோர்(Qureshi Mor) அருகே அமைதிக் குழுத் தலைவர் நூர் ஆலம் மெஹ்சுத்தின்(Noor Alam Mehsud) வீட்டில் நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது தற்கொலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி சஜ்ஜாத் அகமது சாஹிப்சாதா(Sajjad Ahmed Sahibzada) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த போது விருந்தினர்கள் நடனமாடி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த குண்டுவெடிப்பால் அறையின் கூரை இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




