ஆஸ்திரேலியா

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று (19) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யூத சமூகத்தை இலக்கு வைத்து டிசம்பர் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர்வரை காயமடைந்தனர்.

அடுத்த மாதம் 6 ஆம் திகதியே புத்தாண்டில் நாடாளுமன்றம் கூடவிருந்தது.

எனினும், போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்ட மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின.

இதற்கமையவே நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதன்போதே அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை பிரதமர் அந்தோனி அல்பானீஸி முன்வைத்தார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதல் போன்ற மற்றுமொரு சம்பவம் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறும் என உறுதியளித்தார் பிரதமர்.

அதேவேளை, பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு முயற்சித்த நபர்களுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

 

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!