ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரம் அடையும் பருவகால காய்ச்சல் – சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு

ஸ்பெயினில் பருவகால காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் விரைவாக பருவகால காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் பதிவான நோயாளிகளின் தரவுகளுக்கு அமைய, ஒரு லட்சம் பேருக்கு 16.7 இலிருந்து 20.3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளது.

1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளும், 5 முதல் 19 வயதுடையவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலுக்கு உள்ளாகும் குழந்தைகள் மூலமாக குடும்பங்களுக்கும், அங்கிருந்து சமூக மட்டத்திற்கும் நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்று நோயை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!