இலங்கை

பாதாள குழுவுடன் தொடர்பு – வெலிகம தவிசாளர் ஏன் கைது செய்யப்படவில்லை?

சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்குப் பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில், அவர் உயிருடன் இருக்கும்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நேற்றிரவு இடம்பெற்றது.

“நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் முதலாவது அரசியல் படுகொலை இடம்பெற்றுள்ளது.

எல்லாச் சம்பவங்களையும் பாதாள குழுக்கள்மீது திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனநாயக வழியில் மக்கள் வாக்குகளுடன் அவர் (வெலிகம பிரதேச சபை தலைவர்) சபைக்கு வந்தவர். அவரின் படுகொலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

அவருக்குப் பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில், இதுவரையில் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை?” என்றார்.

(Visited 3 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்