ஸ்பெயினில் சட்டவிரோத கிடங்கில் 250 உயிரிழந்த விலங்குகள் கண்டுபிடிப்பு

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்பெயினில் ஒரு அசுத்தமான கிடங்கில் 250 இறந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து தள மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கிராமமான மெசன் டோ வென்டோவில் உள்ள சட்டவிரோத இடத்தில் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
28 சிவாவாக்கள் (chihuahuas) மற்றும் பறவைகள் உட்பட இறந்த விலங்குகளின் சிதைவுகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட மக்காக்கள் (macaws) மற்றும் காகடூக்கள் (cockatoos) போன்ற வெளிநாட்டு பறவை இனங்கள் உட்பட 171 பிற விலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விலங்கு துஷ்பிரயோகம், உயிரினங்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் தகுதியற்ற கால்நடை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தள மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.