டென்மார்கில் விலங்குகளுக்கு உணவளிக்க செல்லப்பிராணிகளை நன்கொடையாக கேக்கும் மிருகக்காட்சிசாலை!

டென்மார்க் மிருகக்காட்சிசாலை ஒன்று, பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை – குறிப்பாக கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
மிருகக்சாட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக இந்த நன்கொடை கோரப்பட்டுள்ளது.
“விலங்கு காப்பகத்தில், விலங்குகளின் இயற்கை உணவுச் சங்கிலியைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது எனவும் விலங்கு நலன் மற்றும் தொழில்முறை ஒருமைப்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையில் நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
மிருகக்காட்சிசாலை குதிரைகள் போன்ற பெரிய விலங்குகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளதுடன், குதிரையின் உரிமையாளர் குதிரையின் மதிப்புக்கு வரி விலக்கு பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)