காசாவில் இரண்டு வாரங்களில் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் இணக்கம்?

காசாவில் போரை இரண்டு வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நடன்யாகு ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு ரகசிய தொலைபேசி உரையாடலில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காசாவில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஆபிரகாம் ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டதாக, ‘உரையாடலை நன்கு அறிந்த’ ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த தொலைபேசி அழைப்பு டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நெதன்யாகு மற்றும் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ஆகியோருக்கு இடையே நடந்ததாகக் கூறப்படுகிறது.
போர் முடிந்ததும், ஹமாஸ் தலைமை நாடுகடத்தப்படும், மேலும் காசாவில் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகுிறது.