மும்பை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க காலணிகள் – அதிகாரிகள் அதிர்ச்சி

- மும்பை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க காலணிகள் – அதிகாரிகள் அதிர்ச்ச
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் காலணிகளில் தங்கத்தை ஒளித்துவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அடிஸ் அபாபாவிலிருந்து மும்பைக்கு வந்த நபர் சாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 4,015 கிராம் தங்கத்தை, செருப்புகளின் குதிகால் பகுதிகளில் அவர் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு 3.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. மும்பைக்கு வந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரது காலணிகளில் பல தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சோதனைகளைத் தவிர்த்து சட்டவிரோத முறையில் தங்கத்தைக் கொண்டுசெல்லவே வித்தியாசமான முறையைக் கையாண்டதாக நபர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 12 visits today)